Tuesday, October 28, 2008

நம்ம ஆள் ஒருத்தனின் அமெரிக்க தேன்நிலவு..

நம்ம ஆள் ஒருத்தனின் அமெரிக்க தேன்நிலவு..
நம்ம ஆளு ஒருத்தன் புதிசா கலியாணம் கட்டி தேன் நிலவுக்கு அமெரிக்கா போக தனது புதுமனைவிக்கும் தனக்கும் அமெரிக்கா விசா, ரிக்கட் , தங்குமிடம் எல்லாம் ஒழுங்கு செய்தான்.

அமெரிக்கா போகிற நாளும் வந்தது.

நேற்று இரவு அம்மா குறுகுறுத்தாள் "தம்பி நாளைக்கு 1ம் திகதி சின்னவனுக்கு பள்ளிகூடத்து காசும் கட்ட வேனும், கரண்டு பில்லும் கட்டவேணும்".

எல்லா பிரச்சனைகளையும் செட்டில் செய்து, ரக்ஸி பிடிச்சு விமான நிலையம் வந்து சேர்ந்தார் நம்ம ஆள். நம்ம ஆளுக்கு சந்திரமண்டலம் போகிற சந்தோசம். வாழ்கையின் இலட்சிய கனவு ஒன்று இன்னும் அரைமணித்துளியில் ஈடேறப்போகிறது.

அமெரிக்க கனவில் இடிவிழுந்தது போல் , ரிக்கட் இன்னும் நீங்கள் "Confirm" பண்னவில்லை பிளைட்டில் இடம் இருந்தால் தருவோம் என்றாள். விமான நிலையத்தில் இருக்கும் உள்வரவுக்கான பகுதிக்கு பொறுப்பாய் இருந்த பெண்மணி.

என்ன இளவோ தெரியவில்லை மனைவியின் ரிக்கட்டில் எதோ குழறுபடியாம்! நம்ம ஆள் குழம்பிவிட்டார். மனைவி இல்லாத அமெரிக்காவா நினைத்துபார்க்கவே தலைசுற்றியது. தேன் நிலவுக் கனவு விமான நிலையத்தோடு பிசு பிசுத்து போனமாதிரி தோன்றியது. நம்ம ஆளுக்கு தலையே சுற்றியது.

விமான நிலையத்தில் அங்கும் இங்கும் பைத்தியமாய் அலைந்தார் , விமான நிலைய அதிகாரிகளை சந்தித்தார். சாதுவாய் தெரிந்த ஒரு அதிகாரியை நம்ம ஆள் திட்டித்தீர்த்தார் அந்த ஆள் கடுப்பாகி தகாத வார்த்தைகளால் திட்டினார். புது மனைவிக்கு முன் அவமானப்படுவது தாங்கமுடியாத ஒன்றாக இருந்தது.

மனதுக்குள் அம்மாவை சபித்துக்கொண்டார். "வெளிக்கிடுகிற நேரத்தில அது இல்லை இது இல்லை என்டு கொண்டு "

நம்ம ஆள் செய்வதறியாது நின்றார். பார்க்க பாவமாய் இருந்தது.

அப்பொழுது தான் அந்த அதிசயம்......

தெய்வம் போல் ஒரு அதிகாரி வந்தார் அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் பால் வார்த்தது போல் இருந்தது. ரிக்கட் "Confirm" பண்னி ஆச்சு , நிங்கள் இப்ப அமெரிக்க போறதில ஒரு பிரச்சனையும் இல்லை..

ஆனால் .... இழுத்தார்...

நெஞ்சு பகீர் என்றது.......

என்ன ஆனால்........

அதில ஒரு சின்ன பிரச்சனை இரண்டு பேரும் ஒன்டா போகமுடியாது.

நிங்கள் இப்ப போகலாம் , மனைவி அடுத்த பிளைட்டில் தான் வரலாம். அடுத்த பிளைட் 18 மணித்தியாலங்கள் பிந்தித்தான் வரும்.

அதிகாரி குண்டை போட்டார்....

இதுக்கு நீங்கள் சம்மதம் என்றால் , இந்த ரிக்கட்டிலேயே அமெரிக்கா போகலாம், அப்படி இல்லை என்றால் இன்று போய் வசதியான ஒரு நாளுக்கு உங்கள் பயணத்தை நீங்கள் ஒழுங்கு செய்யலாம்.

அதிகாரி மின்னாமல் இடி இடித்தார்....

திரும்பி போய் அம்மா , தம்பிக்கு முன்னால் நிற்பதை நினைக்க அவமானமாய் உணர்ந்தார் நம்ம ஆள்.


நம்ம ஆள் தலையை சோறிந்தார்.......(சிந்திக்கிறார் என்று நினைக்கிறேன்.......)


தீர்க்கமாய் இப்பொழுது தலையை நிமிர்த்தி அதிகாரியை பார்த்து சொன்னார்......


நான் இப்ப போறன் மனைவி அடுத்த பிளைட்டில் வரட்டும்......


நம்ம ஆள் எடுத்த அதிரடி முடிவில் மனைவி குழம்பிபோனாள்.....

மனைவியை சமாதானப்படுத்தி ,

மனைவியின் பயணத்தில் எந்த பிரச்சனையும் இனி வராது என்பதை ஒன்றுக்கு இரண்டு தடவை உறுதிசெய்து விட்டு , தனது கைக் கணணியையும் (Laptop) அவளிடம் கொடுத்துவிட்டு "நான் போனவுடன் இமெயில் போடுறன் " என்ற வாக்குறுதியுடன்

சோகத்துடன் மனைவியிடம் இருந்து விடைபெற்றார்........

நம்ம ஆள் இப்ப பிளைட்டில் பறக்க , மனைவி விருந்தினர் இருக்கையில் சோகமாய் இருந்தாள்

(போகுதே போகுதே.. என் பைங்கிளி வானிலே...., நானும் சேர்ந்து போக ஒரு சிறகும் இல்லையே.. என்ற பின்னனி பாடல்(Situation song) போட்டால் இந்த இடத்துக்கு நல்லா இருக்கும்)


ஒருவாறாக அமெரிக்க மண்ணில காலடி எடுத்து வைத்தார் நம்ம ஆள்.


ரக்ஸி பிடித்து அவர் பதிவு செய்து வைத்துருந்த தங்ககம் வந்து சேர்ந்தார்.....சொந்த நாட்டைபோல் அல்லாமல் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாததால் நம்ம ஆள் மனதில் அமெரிக்கவிற்க்கு ஒரு தனி மரியாதை எழுந்தது.

மனதுக்குள் தனது நாட்டை திட்டித்தீர்த்தார்........


முதல் வேலையாக தங்ககம் வந்து மனைவிக்கு இமெயில் போட்டார். மனைவி வந்து சேர இன்னும் 18 மணித்தியாலங்களுக்கு மேல் இருந்தது......

வந்த அசதிக்கு குளித்து விட்டு அப்படியே கட்டிலில் சரிந்தவர்தான் , நன்றாக தூங்கிப்போனார்....

ஒரு இரண்டு, மூன்று மணித்தியாலம் கடந்திருக்கும் வாசல் கதவையாரோ பலமாக தட்ட சென்று பார்த்தவருக்கு திகைப்பு வாசலில் நின்றது பொலிஸ்.....


உங்கட றூமை செக் பண்ண வெணும் என்டாங்கள்.........


நம்மட ஊரிலதான் இந்தக்கொடுமை என்றால் இங்கேயுமா?.....

சோதனை போட அனுமதித்தார் நம்ம ஆள்.....


போலிஸ்காரன் முதல் வேலையாய் கணணியை ஏதோ தூளாவினான்.


சிறிது நேரத்தில் தனது கைத்தொலைபேசியில் யாருடனோ கதைத்தான். யாரொ கிரிமினலை பிடித்து விட்டதாக கைத்தொலைபேசியில் சொன்னன்.

நம்ம ஆளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பொலிஸ்காரன் கேட்டான்....

இந்த கணணியை இரண்டு மணித்தியாலத்திற்க்கு முதல் நீர் உபயோகித்தீரா என்றான்?

நம்ம ஆள் பவ்வியமாக ஆம் என்றார்.

உம்மை சைபர் கிரைமில் கைது செய்கிறேன் என்றான் போலிஸ்காரன்.....

நம் ஆளுக்கு ஒன்டும் விளங்கவில்லை , தனது மனைவிக்கு இமெயில் மட்டுமே அனுப்பியதாக புலம்பிப்பார்த்தார் , அவன் விடுவதாய் இல்லை .

பொலிஸ்காரன் கத்தினான் உனது லூசுதனமான வேலையால் யாரொ ஒரு அமெரிக்க பெண்மணி சாகக்கிடக்கிறாளாம்......

நான் என் மனைவிக்கு இமெயில் அனுப்பினால் உவனுக்கு என்ன ?

என்ன உளறுகிறான்....
நம்ம ஆள் இப்ப தகர்ந்து போனார், தலை சுற்றியது.

கட்டிய மனைவி நடுத்தெருவில் , நான் இப்பொழுது அமெரிக்கா போலிஸில் எல்லாம் மெல்ல கை நழுவுவது போல இருந்தது...

வாழ்க்கை வெறுத்தது....

நம்ம ஆள் ஆத்திரத்தில் உளறினார்.

நம்ம ஆள் உளறது எதுவும் விளங்காமல் , பொலிஸ்காரன் ஒரு மொழி பெயர்ப்பாளன் ஒருவனை கொண்டுவந்தான்....

இதுவேறு மானப்பிரச்சனையாகியது நம் ஆளுக்கு!

நம் ஆள் மொழிபெயர்ப்பாளனுக்கு அளாக்குறையாக பிரச்சனையை விளங்கப்படுத்த மொழிபெயர்ப்பாளன் எதோ பொலிஸ்க்கு சொல்ல 3 மணித்தியால போராட்டத்திற்க்கு பிறகு , பொலிஸ்காரன் மெல்லிய புண்னகையோடு விடுவித்தான்.

இப்ப் நம்ம ஆள் மொழிபெயர்ப்பாளனிடம் கேட்டான் .....

என்ன பிரச்சனை....இங்கே இமெயில் அனுப்பினா பிடிப்பினமே!

மொழிபெயர்ப்பாளன் சிரித்துவிட்டு சொன்னான் உம்மட மனிசிக்கு நீர் அனுப்பிறதில பிரச்சனையில்லை ஆனால் நீர் போய் அடுத்தவன்ர மனிசிக்கெல்லோ அனுப்பியிருக்கிறீர்.

இப்பத்தான் விளங்கியது நம்மாளுக்கு தான் பிழையான முகவரிக்கு இமெயில் அனுப்பினது.


மொழிபெயர்ப்பாளன் தொடர்ந்தான் அனுப்பினது தான் அனுப்பினீர் , புருசன் நேற்றுத்தான் செத்து கவலையில இருக்கிற ஆளாப்பார்த்தெல்லோ அனுப்பியிருக்கிறீர்.

உம்மட இமெயிலை பாத்திட்டு அந்த பெண் மயங்கி விழ , அந்த அமெரிக்க பெண்மனியின்ட மகன்காரன் கடுப்பாகி பொலிஸ்க்கு சொல்லிப்போட்டான் இது தான் நடந்தது.

அமெரிக்காவில கொஞ்சம் இந்த விசயங்களில கவனமாய் இருங்கோ என்கின்ற அறிவுரையுடன் மொழிபெயர்ப்பாளன் விடைபெற்றான்.

நம்ம ஆள் முதல் வேலையாய் வந்து தான் அனுப்பிய இமெயிலை திருப்பி வாசித்தார்........

To: My Loving Wife
Subject: I've Reached
Date: 01 June, 2008
I know you're surprised to hear from me. They have computers here, and we are allowed to send e-mails to loved ones. I've just reached and have been checked in. I see that everything has been prepared for your arrival tomorrow.
Looking forward to seeing you TOMORROW!
Your loving Hubby........


ஓ கணவன் செத்துகிடகிற மனைவிக்கு இப்படி கணவனிடம் இருந்து இமெயில் போனால் யார்தான் குழம்ப மாட்டார்கள் என்று நினைத்தவாறு தன் வீரதீரச்செயலை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்தவாறு மனைவியை அழைக்க விமானநிலையம் வந்தார்.....

மனைவி தூரத்தில் தெரிந்தாள்....

மனதுக்குள் பழைய உற்சாகம்......

ஓடிப்போனார் நம்ம ஆள்..... சினிமா படங்களில் வருவது போல் கட்டி அணைத்து மனைவிக்கு முத்தமிட....

இவர் கிட்ட வந்த பின்னர் தான் மனைவி பத்திரகாளி கோலத்தில் தெரிந்தாள்.....

"ஒரு பொம்பிளையை தனியா விட்டு விட்டு ,என்ன மனிச ஜென்மமோ தெரியேல்ல , இமெயில் அனுப்பிறன் என்டு சொல்லிப்போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு என்ன செய்தியள்?"

"ஒருக்கா போன் பண்ணி பாத்திருக்கலாம் தனே?"

"அமெரிக்கா வந்து முதல் நாளே இப்படி என்றால் ? என்ட வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ?"


நம ஆள் செய்வதறியாது திகைத்து நின்றார். முதலுக்கே நஸ்டம் வந்தது போல் இருந்தது , இனி தேன் நிலவு விளங்கியமாதிரித்தான்....

(சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார், நான் சிரித்துகொண்டே அழுகின்றேன்........)

Sunday, June 8, 2008

சாப்ட்வேர் வாழ்க்கையில் ஒரு நாள்.....


இன்னைக்கு காலையில் எழுந்தப்பவே மணி எட்டு. 8:30மணிக்கு ஆபிசுல ஒரு மீட்டிங். எவன் தான்இப்படி 8:30மணிக்கு மீட்டிங் வைக்கிறாங்கன்னு தெரியலை.

எனக்கு ஒரு மேனேஜர் இருக்கார். அவர்ஒரு சேவல் மாதிரி. 5 மணிக்கு மனுஷன் எழுந்திடுவாரு. ஒரே மெயிலா அடிச்சி தள்ளுவாரு.7:30மணிக்கு ஆபிசுக்கு வந்திடுவாரு. அதனால் அவர் எப்பவுமே மீட்டிங் செட் பண்ற நேரம் காலைஒன்பது மணி, 8:30 மணி இப்படி தான் இருக்கும். மேனேஜர்னா என்னா கொம்பா அப்படின்னு எனக்குதோணும். இருந்தாலும் என்ன பண்றது குப்பை கொட்டியாகனுமேன்னு மல்லு கட்ட வேண்டி இருக்கு.இன்னைக்கு 8:30மணி மீட்டிங் மட்டம் தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு காக்கா குளியல் போட்டு8:30 பஸ் புடிச்சு, அப்புறம் ஒரு டிரெயின் புடிச்சி ஆபிஸ் நுழையறப்ப மணி 9:30, மீட்டிங்அவ்வளவு தான்னு நமக்கு தெரியும். மேனேஜருக்கு முகத்தை காட்டமா அப்படியே நழுவி சீட்டுக்குவந்துட்டேன்.

சீட்டுக்கு வந்ததும் முதல் வேலை இ-மெயில் செக் பண்றது. காலையில இது ஒரு இம்சை. ஒரு 100மெயில் இருக்கும். அதுல எனக்கு தேவையான மெயில் ஒரு 5 மெயில் தான் இருக்கும். அந்த 5மெயிலை கண்டுபிடிக்க 100 மெயிலையும் மேய்ந்து ஆகணும். வேகமா ஒவ்வொரு மெயிலா பார்த்துமுடிச்சப்ப மணி 10:30 ஆயிடுச்சி.

ரொம்ப களைப்பா இருந்துச்சா ஒரு காபி குடிக்கலாம்னுஆபிஸ் cafeteria வந்தேன். இந்த காபி ஒரு இம்சை. ஊரில தேத்தண்ணி காபி, டீ சாப்பிட்டுபழக்கப்பட்டு போன நமக்கு இது ஒரு கசாயம் மாதிரி. ஒரு 6 பாக்கெட் சீனி எடுத்தேன். 6பாக்கெட் சீனி கொட்டினா, அது ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு வரும். அதை போட்டு கப் நிறைய காபிஊத்தி, சும்மா கொஞ்சம் பால் ஊத்தினா கசாயம் தயார் ஆயிடும். அதுக்கு விலை 1.25டாலர். 50ரூபாய் அப்படின்னு ஆரம்ப காலத்துல மனசு கணக்கு போடும். இப்பவல்லாம் அப்படி இல்லை. நம்ம ஊருவிலை நிலவரம் இப்ப மோசமாமே…

காபி குடிச்சு முடிக்கறப்ப மணி 11மணி ஆயிடுச்சி. மேனேஜர் எங்க நம்பள தேடுவாரோஅப்படின்னு பயம் எல்லாம் இல்ல. அதான் "I am looking into this" அப்படின்னு ஒரு நாலுஇ-மெயில மேனேஜருக்கு "CC" போட்டு தட்டிட்டு வந்திருக்கோம்ல. பையன் ஆபிசுல தான் இருக்கான்அப்படின்னு மேனேஜருக்கு தெரியும். வேலை களைப்புல தம் போட போயிருப்பான் அப்படின்னுநினைச்சுருப்பாரு. 11மணிக்கு சீட்டுக்கு வந்து "Looking into this" அப்படின்னு அரை மணிநேரத்துக்கு முன்னாடி சொன்ன பிரச்சனையை பார்க்க ஆரம்பிச்சேன்.

அதுக்குள்ளாற ஒரு இம்சை "Any update on this" அப்படின்னு கேட்டு தொலைச்சிருக்கான். அவன் பெயரைப் பார்த்தேன். நம்மவூர்ஆளு தான். நம்மள மாதிரியே இப்படி மெயில் அடிச்சிட்டு "தம்" போட போயிருப்பான் அப்படின்னுநினைக்கிறேன். பார்த்து தொலைக்கிறேண்டா அப்படின்னு திட்டிக்கிட்டே அந்த மெயிலை முதல்லகவனிச்சு அவனுக்கு ஒரு பதில் போட்டேன். அது போல அந்த நாலு மெயிலையும் கவனிச்சு முடிச்சாமணி 12:30 ஆயிடுச்சி.

சாப்பாடு நேரம் வந்திடுச்சிடோய் அப்படின்னு நம்ம நட்பு ஒருத்தன் வந்துதோலைத் தட்டினான். சரிடா அப்படின்னு கம்யூட்டரை லாக் பண்ணிட்டு கிளம்பினோம். எங்க சாப்பிடறதுன்னு முடிவு பண்றது அடுத்த பிரச்சனை. சரி, நேரா subway போலாம்டாஅப்படின்னு முடிவு பண்ணி Mc D போனோம். இது ஒரு கொடுமையான விஷயம். ஆனாலும் cheap and best. ஒரு பிரட்டை வைச்சி நாளு இலை, தழைகளை வச்சி கொடுப்பானுங்க. அதுக்கு 6டாலர். இங்கயாவது பரவாயில்லை. இதையே நம்ம ஊரில அதுக்கு 500ரூபான்னு சொல்றானுங்க. அங்கன நம்ம அமுல் பேபி பசங்க, பொண்ணுங்க வாங்கற கொடுமைக்கு பெயர்- வெளிநாட்டு கலாச்சாரமாம்.

லஞ்ச் சாப்பிட்டு முடிக்கறப்ப மணி 1:30. நேரா சீட்டுக்கு வந்தா, 2மணிக்கு ஒரு மீட்டிங்காம்.எப்படி இன்னும் சிறந்ததா மென்பொருள் தயாரிக்கலாம் அப்படின்னு அனலிசிஸ் பண்ண போறாங்களாம்.அதுக்கு பேர் - Brain Storming. இப்படி பேசி பேசியே மண்டையில முடி இல்லாமாபோச்சிடுடா அப்படின்னு நொந்து நூடுல்சானேன். ஏற்கனவே அனுப்பின மெயிலுக்கு விளக்கம் கேட்டுசில மெயில்கள். அதுக்கு விளக்கம் சொல்லி முடிச்சி, நேற்று பாதியில விட்டுட்டு போன codingஆரம்பிக்க போனா,

மனசுல நம்மவூர் ஞாபகம் வந்திடுச்சி. நம்ம புதினம், உதயன் , வீரகேசரி எல்லாம் ஒருபார்வை போட்டுட்டு பார்த்தா மணி 2 ஆயிடுச்சி. "Coming.." அப்படின்னு மேனேஜர் கேட்க, வர்றேண்டா அப்படின்னு கிளம்பினேன். நடந்து போனா நம்மபக்கத்து ப்ராஜக்ட் பொண்ணு க்ராஸ் ஆச்சு. ஒரு ஸ்மைல் போட்டு "ஹாய்" சொல்லிட்டு "கொஞ்சம் குண்டாஆயிட்டா" அப்படின்னு நினைச்சுக்கிட்டே கான்பிரன்ஸ் ரூம் போனேன். கொஞ்ச நேரம் சொந்த கதை சோககதை எல்லாம் பேசிட்டு நல்லா Brain Storming பண்ணா, தூக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு.கெட்டியா முழிச்சிக்கிட்டு ஐடியாவா போட்டு தள்ளினோம்.

இப்ப ஓடற இந்த Process, முப்பதுநிமிடம் ஆகுது. 5-10 நிமிடத்துல இது ஓடியாகனும் அப்படின்னு நம்ம மேனேஜர் சொன்னாரு.1மணி நேரம் ஓடிக்கிட்டு இருந்ததை 30நிமிடம் ஆக்கனும்னு சொன்னே. இப்ப 30நிமிடம் ஓடறது5-10 நிமிடமாம். இப்படியே வேலையை கொடுத்துக்கிட்டே இருங்க, அப்ப தான் எல்லோருக்கும், எல்லாகாலத்திலேயும் வேலை இருக்கும் அப்படின்னு நினைச்சுக்க்கிட்டேன். அடுத்த ப்ராஜக்ட்டா இப்பஇருக்கிற Database மாற்றி வேற Database போகலாம்னு சொன்னாரு. போன வருஷம் தான் வேறஒண்ணுல இருந்து மாறினோம். இப்படியே பண்ணிக்கிட்டு இருங்க. இங்கேயே நான் ரிடயர் ஆயிடறேன்அப்படின்னு நினைச்சுக்கிட்டேன்.

மீட்டிங் முடிஞ்சப்ப மணி 3 ஆயிடுச்சி. "let's go for coffee" அப்படின்னு மேனேஜர்சொன்னாரா, அப்படியே cafeteria வந்தோம். காபி வாங்கி ஒரு தம் போட்டு முடிக்கறப்ப மணி3:30 ஆயிடுச்சி. நேரா சீட்டுக்கு வந்து பாதியில இருந்த Codingஐ ஆரம்பிச்சேன். அத்தமுடிச்சு, டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சா மணி 4:30 ஆயிடுச்சி. மறுபடியும் தமிழ்நெட், எக்னாமிஸ்டைம்ஸ், எ -பி- சி, சி.என்.என் அப்படின்னு மேய்ந்து விட்டு மணி பார்த்தா 5:30ஆயிடுச்சி.மேனேஜர் வீட்டுக்கு போயிட்டாரா அப்படின்னு நைசா எட்டி பார்த்தேன். மனுஷன் அசையற மாதிரிதெரியலை.

அவருக்கு தெரியும். அவரு அங்க இருந்து கிளம்பினா அடுத்த நொடி எல்லா பசங்களும்எஸ்கேப் ஆயிடுவானுங்க அப்படின்னு. அதான் மனுஷன் 7:30 மணியில இருந்து அசையாம சீட்டுலஉட்கார்ந்துக்கிட்டு இருக்காரு. சரி என்ன பண்ணலாம் அப்படின்னு தோன்றப்ப, லைட்டா வாக்கிங்போகலாம்னு நேரா தண்ணி குடிக்க வந்தேன். பச்சை தண்ணி தான் - மினரல் வாட்டர். குடிச்சிட்டுபக்கத்து ப்ராஜக்ட் பக்கமா அப்படியே போனேன். ஒரு கூட்டம் தெரிஞ்சுது. கொஞ்சம் நேரம் அரட்டைபோட்டு விட்டு வந்தா மேனேஜர் வீட்டுக்கு போயிக்கிட்டு இருக்காரு.

இதை தானே எதிர்பார்த்தோம்அப்படின்னு ஒரு ஸ்மெல் போட்டோம். "Not leaving" அப்படின்னு கேட்டாரு. "Some work to complete" அப்படின்னு சொன்னேன்."Don't work hard" அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு. சொல்லுவடா சொல்லுவ, வேலையைவரிசையா குடு அப்புறம் Don't work hard அப்படின்னு சொல்லு அப்படின்னு நினைச்சுக்கிட்டேசீட்டுக்கு வந்து logoff பண்ணிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பிய பொழுது மணி 6.

Monday, February 18, 2008

ஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்

கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.
சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.

"சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.



அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.

கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.









தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

Saturday, January 5, 2008

உலக வரைபடத்தில் சில புதிய நாடுகள்

1990 ம் ஆண்டில் இருந்து இன்று வரை உலக பந்தில் 33 புதிய நாடுகள் உருவாகியுள்ளன.

1991 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் உடைவுடன் 15 நாடுகள் புதிதாய் உலகில் பிறப்பெடுத்தன.
1.ஆர்மெனியா (Armenia )
2.அசெர்பைஜான் (Azerbaijan )
3.பயிலொரஷ் (Belarus )
4.எஸ்ரொனியா (Estonia )
5.ஜோர்ஜியா (Georgia )
6.கசகஸ்தான் (Kazakhstan)
7.கிர்கிஸ்தான் (Kyrgyzstan )
8.லற்வியா (Latvia )
9.லிதுவேனியா(Lithuania )
10.மோல்டொவா (Moldova )
11.ரஷ்யா (Russia )
12.ரஜிகிஸ்தான் (Tajikistan)
13.ரேர்க்மெனிஸ்தான் (Turkmenistan )
14.உக்ரேய்ன் (Ukraine )
15.உஸ்பெக்ஸ்தான் (Uzbekistan )



1990 களின் ஆரம்பத்தில் யுகோசலாவாக்கியாவின் வீழ்ச்சியுடன் 5 புதிய நாடுகள் உதயமாகின.
1. பொஸ்னியா (Bosnia- 29/02/1992 இல்)
2.குரோசியா (Croatia-25/06/1991 இல்)
3.மசடோனியா (Macedonia- 08/09/1991 இல் அது தன்னை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த்த போதும் 1994 ம் ஆண்டே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கிகாரம் பெற முடிந்தது.)
4.மொன்டினிக்குரோ (Montenegro -03/06/2006)
5.சேர்பியா (Serbia- 17/04/1992)
6.சலோவேனியா (Slovenia- 25/06/1991 இல்)

21/03/1990 நம்பியா(Namibia) , தென் ஆபிரிக்காவிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது.

23/05/1990 இல் வடக்கு யெர்மனும் தெற்க்கு யேர்மனும் இனைந்து யெர்மன்(Yemen) எனும் புதிய நாடு உருவாகியது.

03/10/1990 இல் கிழக்கு ஜெர்மனியும் ,மேற்க்கு ஜெர்மனியும் இனைந்து ஜெர்மனி(Germany) எனும் நாடு உலக பந்தில் மீண்டும் உருவானது.

17/09/1991 மார்ஷல் தீவுகள்(Marshall Islands) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

17/09/1991 மைக்கிரோனேசியா(Micronesia) அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

01/01/1993 ம் ஆண்டு செக்கொசெலாவாக்கியா செக்(Czech) குடியரசாகவும் , செலோவாக்கியாவாகவும்(Slovakia) இரண்டாய் பிரிந்தன.

25/05/1993 எரித்திரியா(Eritrea) வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் எதியோப்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.



1/10/1994 போலலு(Palau) அமெரிக்காவின் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகியது.

20/05/2002 கிழக்கு தீமோர் (East Timor) 1975 ம் ஆண்டு போர்த்துகல் இடம் இருந்து சுதந்திர நாடாகிய போதும் ,தனது இறைமையை இந்தோனேசியாவிடம் இழந்தது. மீண்டும் 2002 இல் தனது வீரம் செறிந்த விடுதலை போராட்டம் மூலம் இந்தோனேசியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

சோமாலிலாந்து (Somaliland) 18/05/1991 இல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்ததுடன் இன்றுவரை அமெரிக்காவாலும் சில ஐரோப்பிய , ஆபிரிக்க நாடுகளாலும் அங்கிகரிக்க பட்ட ஓர் நாடாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.



தமிழீழம் (Tamil Eelam)- 14/5/1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படி சிறிலங்கா குடியரசில் இருந்து பிரிந்து சென்று தமிழீழம் என்னும் தனி நாடொன்றை அமைப்பதற்காய் இன்று வரை போராடிவரும் நாடு.